Quote Originally Posted by tripidea View Post
ஆற்றில் விழுந்த மழைத்துளி நன்னீர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும், ஆனால் அந்த ஆறும் ஒருநாள் கடலுடன் கலக்கும். நல்ல எண்ணங்கள் எவ்வளவு சேர்ந்தாலும் நமது வாழ்வு இடையில் கெட்டதுடன் சேர்ந்து ஆகவேண்டிய காலம் இது.


ஒரு நல்லவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி நன்மையானது, ஆனால் அந்த நன்மை பெற்ற ஒருவன் அந்த உதவி பெறுவதற்கு காரணம் ஒரு கெட்ட விஷயமாகவே இருக்கும்.

அந்த ஆற்று நீர் கடலுடன் கலப்பத்துக்கு முன் அதை நேர் வழியில் பயன் படுத்தி நன்மை பெறுபவர்களும் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? இறுதியில் நடப்பதை வைத்து முடிவு பண்ணாதீர்கள் இடையில் எங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விடயங்களை பற்றியும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். சரி ஏன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த படிகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள் இவற்றையெல்லாம் தாண்டி தான் வந்திருப்பீர்கள். ஏன் நீங்கள் நல்லவராக இல்லையா நீங்களும் கெட்ட விடயங்களுடன் சேர்ந்து கெட்டவராக மாறிவிட்டீர்களா?