Quote Originally Posted by Sheero View Post
தினசரி பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் இவ்வாறான பல சம்பவங்களை பற்றி அறியவருவது கவலையளிக்கிறது. சமீபத்தில் கிழக்கு மாகாணத்தில் ஒரு கிராமத்தில் நுண்கடன் தொல்லையால் 22 வயது மேசன் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.அரசாங்கம் இந்த பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறான தினகூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம்.



நுண்கடன் வழங்கமுடியாதவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்!இல்லாவிடின் இவ்வாறன சம்பவங்கள் தொடர வாய்ப்பு அதிகம் வாய்ப்புள்ளது
மிகவும் வருத்தம் அளிக்கும் சம்பவம்,உண்மை அரசாங்கம் இவ்வாறான சம்பவங்கள் மேலும் நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுண்கடன் தற்கொலைகளை தடுக்கும் வேறு உபாயங்கள் என்ன?