உலகத்தில் எல்லோருக்கும் தோல்வி வரும். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் உங்களிடம் நீங்கள் கேட்கும் கேள்வி என்ன ?
Printable View
உலகத்தில் எல்லோருக்கும் தோல்வி வரும். ஒவ்வொரு முறை தோற்கும் போதும் உங்களிடம் நீங்கள் கேட்கும் கேள்வி என்ன ?
நான் எதற்காக தோல்வி பெற்றேன் என்பதை அறிந்து மறுபடியும் இப் பிழையை விடமாட்டேன் என்று எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்
நான் தோற்க்கும் போது கேட்கும் கேள்வி,ஏன் இந்த தவறை விட்டேன்.எனக்கு தெரிந்தும் ஏன் அந்த தோல்விக்கு விட்டேன். மறுபடியும் இப் பிழையை விடகூடாது என்று எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன்.
நண்பா/நண்பி
நீ கேள்வி கேட்டால் மட்டும் போதாது நீ கேட்ட கேள்வியை நீ பின்பற்ற வேண்டும் இல்லையென்றால் நீ கேட்டு எந்த பயனும் இல்லை.
முதலில் நீ ஏன் அதை செய்தாய் என்று உணர வேண்டும் அத்தோடு நீ தவறு செய்து இருந்தால் அதை ஏற்று கொள்ளும் மனப்பாங்கு தேவை. இன்றைய காலகட்டத்தில் இந்த மனப்பாங்கு நிறைய பேரிடம் இல்லை மற்றும் குறைந்து கொண்டு செல்கின்றது.
தவறை ஏற்று கொண்டாலே பாதி பிரச்சனைகள் சுபமாக முடியும் நண்பி.. அதற்காக நீ செய்யாத ஒன்றிக்காக உன்னை விட்டு கொடுக்காதே.. பேசவேண்டிய நேரத்தில் பேசி தான் ஆகா வேண்டும். உன் தவறை நீ ஏற்று கொண்டால் சமுதாயத்தில் நீ ஒரு நல்ல மனிதனாக இருப்பாய்.
நீ கேக்கலாம் இது எனது வாழ்க்கை எனக்கு பிடித்தால் போலத்தான் நான் வாழ முடியும் சமுதாயத்திற்காக வாழ முடியாது என்று. முதலில் நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நாம் வாழ்வது நமக்கான ஒரு தனி உலகம் இல்லை. இங்கு நாம் பல்வேறுபட்ட மனிதர்களுடன் வாழ்கிறோம் எனவே நாம் சில விடயங்களில் பொதுவாக தான் சிந்தித்து செயல் பட வேண்டும் அது தான் மிகவும் ஒரு புத்திசாலித்தனம்.
ஒரு முறை நீ உன் தவறை ஏற்று கொண்டு பார் மற்றவர்கள் உன் மீது வைத்து இருக்கும் மரியாதையை புரியும்.
இது புரிந்தால் நான் உனக்கு தலை வணங்குவேன் நண்பி !