Try our "Help Me AI"
Results 1 to 10 of 10

Thread: ஏன் நாம் அடுத்தவரின் கருத்தை கேட்கிறோம்?

  1. #1
    Status
    Offline
    shahana's Avatar
    New member
    Join Date
    Mar 2019
    Posts
    27
       Rep Power
    0

    ஏன் நாம் அடுத்தவரின் கருத்தை கேட்கிறோம்?

    என்னுடைய கருத்தில் இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி அஞ்சி வாழ்கிறார்கள். இப்படியான நபர்களுக்கு நீங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள்.

  2. #2
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16
    Quote Originally Posted by shahana View Post
    என்னுடைய கருத்தில் இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி அஞ்சி வாழ்கிறார்கள். இப்படியான நபர்களுக்கு நீங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள்.
    நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும் அடுத்தவர்களிடம் இருந்து ஏதேனும் பிரச்சனைகளை கொண்டுவரும் என்பதை மனதில்கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் யார் என்ன செய்தாலும் அவர்களில் பிழை சொல்ல இந்த உலகமே வரும்.


    ஆகவே நாம் எந்த ஒரு விடயம் செய்ய நினைத்தாலும் அடுத்தவர் கருத்தை கேட்டு செய்வது நல்லது, ஆனால் ஒன்றை மட்டும் மறக்க கூடாது நாம் செய்ய நினைத்த காரியத்தை அடுத்தவர் கருத்தை கேட்டு முடிவை நாம் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும்.


    கருத்து கேட்பது நன்று ஆனால் முடிவு நம்கையில் மட்டுமே இருக்க வேண்டும் மறக்க கூடாது.

  3. #3
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by shahana View Post
    என்னுடைய கருத்தில் இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி அஞ்சி வாழ்கிறார்கள். இப்படியான நபர்களுக்கு நீங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள்.
    நாம் ஒரு காரியத்தை செய்ய முதல் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்டு முடிவு எடுப்பது தவறல்ல. ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அடுத்தவர் என்ன சொல்வாரோ என்று பயந்து செய்வது தவறு.

    நமது வாழ்க்கையை நாம் நமக்கு பிடித்த முறையில் வாழ வேண்டும்.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  4. #4
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by tripidea View Post
    நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும் அடுத்தவர்களிடம் இருந்து ஏதேனும் பிரச்சனைகளை கொண்டுவரும் என்பதை மனதில்கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் யார் என்ன செய்தாலும் அவர்களில் பிழை சொல்ல இந்த உலகமே வரும்.


    ஆகவே நாம் எந்த ஒரு விடயம் செய்ய நினைத்தாலும் அடுத்தவர் கருத்தை கேட்டு செய்வது நல்லது, ஆனால் ஒன்றை மட்டும் மறக்க கூடாது நாம் செய்ய நினைத்த காரியத்தை அடுத்தவர் கருத்தை கேட்டு முடிவை நாம் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும்.


    கருத்து கேட்பது நன்று ஆனால் முடிவு நம்கையில் மட்டுமே இருக்க வேண்டும் மறக்க கூடாது.
    நீங்கள் சொல்லவது எனக்கு புரியவில்லை. யாருடைய கருத்தை கேட்டு செய்தாலும் நாம் செய்யும் காரியத்துக்கு எமக்கு தான் முடிவு கிடைக்கும். உங்களுடைய சுய சிந்தனையில் அதை செய்க்கிறீகள். அதை ஏன் நீங்கள் விரும்பிய முறையில் செய்ய கூடாது. நமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழப்போவதில்லையா நாம் தான் வாழ போகின்றோம் அதை ஏன் மற்றவர்களுக்கு பிடித்ததை போல் வாழ வேண்டும்? இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து பார்ப்போம்.

  5. #5
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நீங்கள் சொல்லவது எனக்கு புரியவில்லை. யாருடைய கருத்தை கேட்டு செய்தாலும் நாம் செய்யும் காரியத்துக்கு எமக்கு தான் முடிவு கிடைக்கும். உங்களுடைய சுய சிந்தனையில் அதை செய்க்கிறீகள். அதை ஏன் நீங்கள் விரும்பிய முறையில் செய்ய கூடாது. நமது வாழ்க்கையை மற்றவர்கள் வாழப்போவதில்லையா நாம் தான் வாழ போகின்றோம் அதை ஏன் மற்றவர்களுக்கு பிடித்ததை போல் வாழ வேண்டும்? இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை நமக்கு பிடித்த மாதிரி வாழ்ந்து பார்ப்போம்.
    இருப்பது ஒரு வாழ்க்கை அதை நிம்மதியாக வாழ வேண்டும், அதனால் மற்றவர் கருத்தை கொஞ்சம் கேட்டால் அவர்களுக்கு விருப்பமில்லாத விடயங்களை தெரிந்துகொண்டு நமக்கு பிடித்த விடயங்களை சரியாக செய்து சந்தோசமாக வாழ்வோம்.


    அடுத்தவர் கருத்தை கேட்காமல் நமக்கு பிடித்த மாதிரி எல்லாமே செய்தால் நமக்கு தெரியாமல் அதிகமான பிரச்சனைகள் நம்மை சுற்றி வரும் அதை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் எவரையும் பொருட்படுத்தாமல் உங்களுக்கு பிடித்ததை பிடித்த மாதிரியே செய்து சந்தோசமாக வாழுங்கள்.

  6. #6
    Status
    Offline
    Vaishnavi's Avatar
    Senior Member
    Join Date
    Feb 2019
    Location
    Vavuniya ,SriLanka
    Posts
    105
       Rep Power
    16
    Quote Originally Posted by tripidea View Post
    இருப்பது ஒரு வாழ்க்கை அதை நிம்மதியாக வாழ வேண்டும், அதனால் மற்றவர் கருத்தை கொஞ்சம் கேட்டால் அவர்களுக்கு விருப்பமில்லாத விடயங்களை தெரிந்துகொண்டு நமக்கு பிடித்த விடயங்களை சரியாக செய்து சந்தோசமாக வாழ்வோம்.


    அடுத்தவர் கருத்தை கேட்காமல் நமக்கு பிடித்த மாதிரி எல்லாமே செய்தால் நமக்கு தெரியாமல் அதிகமான பிரச்சனைகள் நம்மை சுற்றி வரும் அதை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் எவரையும் பொருட்படுத்தாமல் உங்களுக்கு பிடித்ததை பிடித்த மாதிரியே செய்து சந்தோசமாக வாழுங்கள்.
    நீங்கள் சொல்வது சரிதான் அதற்காக அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தால் நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாகவும் விரும்பியபடியும் வாழ முடியாது. நீங்கள் சொல்லுகிறீர்கள் பிரச்சினைகள் நிறைய வரும் என்று. உங்களால் சொல்ல முடியுமா மற்றவர்களிடம் கேட்டு செய்வதால் பிரச்சினைகள் வராது என்று?

  7. #7
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by tripidea View Post
    இருப்பது ஒரு வாழ்க்கை அதை நிம்மதியாக வாழ வேண்டும், அதனால் மற்றவர் கருத்தை கொஞ்சம் கேட்டால் அவர்களுக்கு விருப்பமில்லாத விடயங்களை தெரிந்துகொண்டு நமக்கு பிடித்த விடயங்களை சரியாக செய்து சந்தோசமாக வாழ்வோம்.


    அடுத்தவர் கருத்தை கேட்காமல் நமக்கு பிடித்த மாதிரி எல்லாமே செய்தால் நமக்கு தெரியாமல் அதிகமான பிரச்சனைகள் நம்மை சுற்றி வரும் அதை எதிர்கொள்ள தைரியம் இருந்தால் எவரையும் பொருட்படுத்தாமல் உங்களுக்கு பிடித்ததை பிடித்த மாதிரியே செய்து சந்தோசமாக வாழுங்கள்.
    அடுத்தவரை காயப்படுத்தாமல், உண்மைக்கு முரண்படாமல் வாழ்ந்தால் நாம் நமக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோசமாக வாழலாம்.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

  8. #8
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16
    Quote Originally Posted by Vaishnavi View Post
    நீங்கள் சொல்வது சரிதான் அதற்காக அவர்கள் சொல்வதை எல்லாம் செய்தால் நாங்கள் எங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாகவும் விரும்பியபடியும் வாழ முடியாது. நீங்கள் சொல்லுகிறீர்கள் பிரச்சினைகள் நிறைய வரும் என்று. உங்களால் சொல்ல முடியுமா மற்றவர்களிடம் கேட்டு செய்வதால் பிரச்சினைகள் வராது என்று?
    மற்றவர்களுடைய கருத்தை கேட்கத்தான் சொன்னேன், அதையே செய்ய சொல்லவில்லை. அடுத்தவர் கருத்தை கேட்டாலும் பிரச்சினை வரும் கேட்காவிட்டாலும் பிரச்சினை வரும். முடிவு உங்கள் கையில் உள்ளது, நீங்கள் என்ன முடிவு எடுக்க போகிறீர்கள்.

  9. #9
    Status
    Offline
    tripidea's Avatar
    Senior Member
    Join Date
    May 2018
    Location
    Colombo
    Posts
    140
       Rep Power
    16
    Quote Originally Posted by Bhavya View Post
    அடுத்தவரை காயப்படுத்தாமல், உண்மைக்கு முரண்படாமல் வாழ்ந்தால் நாம் நமக்கு பிடித்த வாழ்க்கையை சந்தோசமாக வாழலாம்.
    அடுத்தவரை காயப்படுத்த சொல்லி சொல்லவில்லை நீங்கள் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வகையில் வாழுங்கள்.

  10. #10
    Status
    Offline
    Bhavya's Avatar
    Administrator
    Join Date
    Apr 2018
    Location
    Vavuniya, Srilanka
    Posts
    7,687
    Blog Entries
    50
       Rep Power
    60
    Quote Originally Posted by tripidea View Post
    அடுத்தவரை காயப்படுத்த சொல்லி சொல்லவில்லை நீங்கள் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வகையில் வாழுங்கள்.
    ஆம், நீங்கள் அவ்வாறு சொல்லவில்லை, நான் எப்படி சந்தோசமாக வாழலாம் என்ற என்னுடைய கருத்தை தெரிவித்தேன்.
    You're not going to master the rest of your life in one day. Don't stress. Master the day. Make this a daily reminder.

Similar Threads

  1. Replies: 8
    Last Post: 12-24-2019, 10:19 AM
  2. Replies: 11
    Last Post: 12-21-2019, 02:12 PM
  3. Replies: 1
    Last Post: 12-21-2019, 12:04 PM
  4. Replies: 1
    Last Post: 12-10-2019, 01:18 PM
  5. Replies: 0
    Last Post: 11-15-2019, 03:11 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Who We Are

The Hub Sri Lanka is an online community portal for all the Sri Lankan digital Citizen's to enthusiastically learn and connect with the society by enormously increasing their knowledge and careers through an extensive collaborative marketplace.

Join us
RSS RSS 2.0 XML MAP HTML