Quote Originally Posted by Dhara View Post
இன்று நிலவி வருகின்ற இந்த கொரோனா covid-19 தொற்று நோய் காரணமாக உலகமே முடங்கி கிடக்கின்றது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட்து சுற்றுலா துறை. ஒரு நாட்டிற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருவது சுற்றுலா துறை. இந்தவகையில் சுற்றுலா துறையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?
சுற்றுலா வழிகாட்டியான லோன்லி பிளானட் இணையதளம் கடந்த 2019ம் ஆண்டு மேற்கொண்ட தரவரிசைப்படுத்தலில் 2019ல் சுற்றுலா மேற்கொள்வதற்கான உலகின் சிறந்த நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு முதன்மையான நாடு என்ற அந்தஸ்த்தை வழங்கியிருந்தது. ஆனால் தற்போது கொரோனாவால் இலங்கை சுற்றுலா துறை பின்னடைவை சந்தித்துள்ளது.ஆனால் சரியான மீழ்கட்டமைப்பை மேற்கொள்வதன் மூலம் நாம் இலங்கை சுற்றுலா துறையை மேம்படுத்த முடியும்.