நாம் வாழ்வது ஒரு உலகம் இங்கு மனிதன் வாழ்வதை போல வாழ்ந்தாலே நம்மால் வாழ முடியும் இல்லாவிடில் உலகம் நம்மை அழித்து விடும், நாம் யாரையும் ஏமாற்றவில்லை நம்மை ஏமாற்ற வைக்கின்றனர்.
நாம் உண்மையாக இருந்தால் நம்மை நம்ப மாட்டார்கள் அதுவே பொய்யாக இருந்தால் உறுதியாக நம்புவார்கள்.
நாம் யாரிடமும் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது, நம் வாழ்க்கை மிக சிறியது அதனை சாதாரணமாக வாழுவோம் அதற்காக உலகத்தோடு ஒன்றிணைந்து வாழ்வோம்.
ஏன் நீங்கள் உலகத்தை குறை சொல்லுகிறீர்கள் உங்களை போல் பொய்யான மனிதர்கள் வாழ்வதால் தான் உலகமும் பொய்யாக தெரிகிறது. இந்த உலகத்தில் உண்மையானவர்களும் இருக்கின்றார்கள் நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் பொய்யானவர்களிடம் மட்டும் பழகுவதால் மட்டும் தான் உங்களால் உண்மை எது பொய் எது என்று புரிந்துகொள்ளும் மன நிலை இல்லை நீங்களும் அவர்களுடன் சேர்ந்து பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பொய்யானவர்களை விட்டு விலகி வெளியில் வந்து பாருங்கள் உண்மையானவர்களை நீங்கள் அறிய கூடியதாக இருக்கும். உங்களை யாரும் ஏமாற்றவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களை ஏமாற்ற நினைக்கிறீர்கள் உண்மையாக பழகி பாருங்கள் அவர்களின் உறவிலும் உண்மை இருக்கின்றது என்பதை உணர்வீர்கள் .
நாம் மற்றவர்களை ஏமாற்றவில்லை, அவர்கள்தான் ஏமாறுகின்றனர்.
கடலிலே மழைத்துளி விழுந்தாலும் அதுவும் உப்பாகத்தான் மாறும், மழைத்துளி விழுந்த கடல்தானே என்று அந்த நீரை பருக முடியாது அதே போலத்தான் இந்த உலகில் நல்லவர்கள் இருந்தாலும் அவர்களும் கெட்டவர்களாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கின்றோம் என்பது முக்கியம் அல்ல நாம் யாருடன் வாழ்கின்றோம் சேர்க்கின்றோம் என்பதே முக்கியம்.
இந்த உலகில் அதிகமாக கெட்ட எண்ணங்களும் கெட்ட சிந்தனைகளுமே அதிகமாக உள்ளது எனவே நாம் நல்லவர்களுடன் பழகினாலும் அவர்களையும் கெட்டவர்களாக மாற்ற வேண்டிய நிலை வரும்.
உலகுடன் ஒன்றாக வாழ பழகிக்கொள்வோம்.
நீங்கள் இந்த விடயத்தில் கூட கெட்டதை மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள். ஏன் உங்களால் கெட்டதை விட்டு வெளிய வர முடியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் கடலில் விழும் மழை துளி உப்பாக மாறுவதால் அதை பயன்படுத்த முடியாது என்று என் நீங்கள் இப்படி யோசிக்க தவறுகிறீர்கள், அந்த மழை துளி ஆற்றில் விழும் போது அது எல்லோராலும் பயன்படுத்த கூடியதாக மாறுகின்றது. எல்லாத்தையும் நீங்கள் கெட்டதாகவே பார்க்கின்ற மன நிலையை மாற்றி பாருங்கள் உங்களில் நிகழும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள்.
ஆற்றில் விழுந்த மழைத்துளி நன்னீர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும், ஆனால் அந்த ஆறும் ஒருநாள் கடலுடன் கலக்கும். நல்ல எண்ணங்கள் எவ்வளவு சேர்ந்தாலும் நமது வாழ்வு இடையில் கெட்டதுடன் சேர்ந்து ஆகவேண்டிய காலம் இது.
ஒரு நல்லவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி நன்மையானது, ஆனால் அந்த நன்மை பெற்ற ஒருவன் அந்த உதவி பெறுவதற்கு காரணம் ஒரு கெட்ட விஷயமாகவே இருக்கும்.
அந்த ஆற்று நீர் கடலுடன் கலப்பத்துக்கு முன் அதை நேர் வழியில் பயன் படுத்தி நன்மை பெறுபவர்களும் உள்ளார்கள் என்பதை நீங்கள் அறிந்ததில்லையா? இறுதியில் நடப்பதை வைத்து முடிவு பண்ணாதீர்கள் இடையில் எங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விடயங்களை பற்றியும் கொஞ்சம் யோசித்து பாருங்கள். சரி ஏன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கடந்து வந்த படிகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள் இவற்றையெல்லாம் தாண்டி தான் வந்திருப்பீர்கள். ஏன் நீங்கள் நல்லவராக இல்லையா நீங்களும் கெட்ட விடயங்களுடன் சேர்ந்து கெட்டவராக மாறிவிட்டீர்களா?
யாருமே பிறக்கும் போது கெட்டவராக பிறப்பதில்லை, இந்த உலக வாழ்க்கை அவர்களை கெட்ட வழியில் செல்ல தூண்டுகின்றது, எவ்வளவு நன்மைகள் செய்தாலும் அதை மறந்து நாம் செய்யும் ஒரே ஒரு கெட்டதை மட்டுமே பார்க்கின்றனர்.
நன்மைகள் செய்தாலும் தவறு, நன்மை பெற்றாலும் தவறு என்ற மனநிலை வந்துவிட்டது. எனவே நன்மைகள் பல செய்வோம் கெட்டவர் என்ற பெயர் பெறுவோம்.
Bookmarks