
Originally Posted by
shahana
ஏன் நீங்கள் உலகத்தை குறை சொல்லுகிறீர்கள் உங்களை போல் பொய்யான மனிதர்கள் வாழ்வதால் தான் உலகமும் பொய்யாக தெரிகிறது. இந்த உலகத்தில் உண்மையானவர்களும் இருக்கின்றார்கள் நீங்கள் அதை புரிந்து கொள்ளாமல் பொய்யானவர்களிடம் மட்டும் பழகுவதால் மட்டும் தான் உங்களால் உண்மை எது பொய் எது என்று புரிந்துகொள்ளும் மன நிலை இல்லை நீங்களும் அவர்களுடன் சேர்ந்து பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் பொய்யானவர்களை விட்டு விலகி வெளியில் வந்து பாருங்கள் உண்மையானவர்களை நீங்கள் அறிய கூடியதாக இருக்கும். உங்களை யாரும் ஏமாற்றவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களை ஏமாற்ற நினைக்கிறீர்கள் உண்மையாக பழகி பாருங்கள் அவர்களின் உறவிலும் உண்மை இருக்கின்றது என்பதை உணர்வீர்கள் .
Bookmarks