Quote Originally Posted by shahana View Post
என்னுடைய கருத்தில் இந்த உலகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்களுடைய சுய கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி அஞ்சி வாழ்கிறார்கள். இப்படியான நபர்களுக்கு நீங்கள் என சொல்ல விரும்புகிறீர்கள்.
நாம் செய்கின்ற எந்த ஒரு செயலும் அடுத்தவர்களிடம் இருந்து ஏதேனும் பிரச்சனைகளை கொண்டுவரும் என்பதை மனதில்கொண்டு செய்ய வேண்டும். ஏனென்றால் யார் என்ன செய்தாலும் அவர்களில் பிழை சொல்ல இந்த உலகமே வரும்.


ஆகவே நாம் எந்த ஒரு விடயம் செய்ய நினைத்தாலும் அடுத்தவர் கருத்தை கேட்டு செய்வது நல்லது, ஆனால் ஒன்றை மட்டும் மறக்க கூடாது நாம் செய்ய நினைத்த காரியத்தை அடுத்தவர் கருத்தை கேட்டு முடிவை நாம் மட்டுமே எடுத்து செய்ய வேண்டும்.


கருத்து கேட்பது நன்று ஆனால் முடிவு நம்கையில் மட்டுமே இருக்க வேண்டும் மறக்க கூடாது.