Quote Originally Posted by Bhavya View Post
மனம் ஒரு குரங்கு என்பதன் காரணம் அதன் விருப்பங்களும் ஆசைகளும் காலத்திற்கேற்ப மாறும் என்பதால் அன்றி அதன் உண்மையும் நேர்மையும் மாறும் என்பதால் அல்ல.

மனசாட்சிக்கு உண்மையாக நடந்தால் மனிதன் பிரச்சினை வரும் சமயத்திலும் உண்மையைச் சொல்வான், உண்மையாக நடப்பான்.
மனம் குரங்கு போல மாறிக்கொண்டே இருக்கும் போது, மனச்சாட்சி எங்கே இருக்கும், இருந்தாலும் எப்படி நிலையாக இருக்கும்.?


மனிதன் குரங்கில் இருந்து வந்தான் எனவே அவனும் ஒரு போதும் மாற்றத்தை நிறுத்த மாட்டான், எனவே எந்த நல்லவனும் கெட்டவன் ஆகலாம், எந்த கெட்டவனும் நல்லவன் ஆகலாம். மாற்றம் உலகம் முழுதும் உள்ளது நாம் நிலையானதை தேடினால் கடைசியில் வெறும் கையுடன் நிற்க வேண்டிய நிலை வரும்.