Quote Originally Posted by tripidea View Post
நாம் மற்றவர்களை ஏமாற்றவில்லை, அவர்கள்தான் ஏமாறுகின்றனர்.
கடலிலே மழைத்துளி விழுந்தாலும் அதுவும் உப்பாகத்தான் மாறும், மழைத்துளி விழுந்த கடல்தானே என்று அந்த நீரை பருக முடியாது அதே போலத்தான் இந்த உலகில் நல்லவர்கள் இருந்தாலும் அவர்களும் கேட்டவர்களாக மாற வேண்டிய கடடயம் ஏற்பட்டுள்ளது.

நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கின்றோம் என்பது முக்கியம் அல்ல நாம் யாருடன் வாழ்கின்றோம் சேர்க்கின்றோம் என்பதே முக்கியம்.


இந்த உலகில் அதிகமாக கெட்ட எண்ணங்களும் கெட்ட சிந்தனைகளுமே அதிகமாக உள்ளது எனவே நாம் நல்லவர்களுடன் பழகினாலும் அவர்களையும் கெட்டவர்களாக மாற்ற வேண்டிய நிலை வரும்.


உலகுடன் ஒன்றாக வாழ பழகிக்கொள்வோம்.


நீங்கள் இந்த விடயத்தில் கூட கெட்டதை மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள். ஏன் உங்களால் கெட்டதை விட்டு வெளிய வர முடியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் கடலில் விழும் மழை துளி உப்பாக மாறுவதால் அதை பயன்படுத்த முடியாது என்று என் நீங்கள் இப்படி யோசிக்க தவறுகிறீர்கள், அந்த மழை துளி ஆற்றில் விழும் போது அது எல்லோராலும் பயன்படுத்த கூடியதாக மாறுகின்றது. எல்லாத்தையும் நீங்கள் கெட்டதாகவே பார்க்கின்ற மன நிலையை மாற்றி பாருங்கள் உங்களில் நிகழும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள்.