Quote Originally Posted by shahana View Post
நீங்கள் இந்த விடயத்தில் கூட கெட்டதை மட்டும் தான் சொல்லி இருக்கிறீர்கள். ஏன் உங்களால் கெட்டதை விட்டு வெளிய வர முடியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் கடலில் விழும் மழை துளி உப்பாக மாறுவதால் அதை பயன்படுத்த முடியாது என்று என் நீங்கள் இப்படி யோசிக்க தவறுகிறீர்கள், அந்த மழை துளி ஆற்றில் விழும் போது அது எல்லோராலும் பயன்படுத்த கூடியதாக மாறுகின்றது. எல்லாத்தையும் நீங்கள் கெட்டதாகவே பார்க்கின்ற மன நிலையை மாற்றி பாருங்கள் உங்களில் நிகழும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள்.
ஆற்றில் விழுந்த மழைத்துளி நன்னீர் ஆகும் எல்லோருக்கும் பயன்படும், ஆனால் அந்த ஆறும் ஒருநாள் கடலுடன் கலக்கும். நல்ல எண்ணங்கள் எவ்வளவு சேர்ந்தாலும் நமது வாழ்வு இடையில் கெட்டதுடன் சேர்ந்து ஆகவேண்டிய காலம் இது.


ஒரு நல்லவன் ஒருவனுக்கு செய்கின்ற உதவி நன்மையானது, ஆனால் அந்த நன்மை பெற்ற ஒருவன் அந்த உதவி பெறுவதற்கு காரணம் ஒரு கெட்ட விஷயமாகவே இருக்கும்.