Quote Originally Posted by shahana View Post
உங்கள் கருத்தில் கொஞ்சம் கூட நிஜயாம் இருப்பதாக தெரியவில்லை. ஏன் என்றால் உதவி செய்யும் போது நீங்கள் உங்கள் சுய சிந்தனையில் யோசிப்பதில்லையா நான் ஒருத்தருக்கு உதவி செய்ய போகின்றேன் அது சரியா? நான் செய்ய போகும் உதவியால் வேற யாரும் பாதிக்க படுவார்களா? நான் உதவி செய்யும் நபர் நல்லதுக்காகவா அந்த உதவியை கேக்கிறார் என்று நீங்கள் சிறிதும் சிந்திக்காமலா உதவி செய்வீர்கள் ? நீங்கள் இதை கவனத்தில் கொண்டு நடந்தால் நீங்கள் செய்யும் உதவி பயனுள்ளதாகவும் மதிக்க கூடியதாகவும் இருக்கும் .
செய்கின்ற உதவி எதையும் யோசிக்காமல் செய்ய வேண்டும், அவ்வாறு யோசித்து செய்தாலும் மற்றவர் பார்வையில் அது உள்நோக்கத்துடன் செய்வதாகவே தெரியும். எனவே உதவியை பாரபட்ஷம் பார்க்காமல் செய்து முடிந்தவரை மற்றவர்களை வாழ வைப்போம்.